30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சியம்பலான்டுவ – கொலொன்வின்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவரிடம் இருந்த 30 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

