சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

248 0

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மதுபான போத்தல்களுடன் சிற்றூர்ந்தில் பயணித்த வெளிநாட்டு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிற்றூர்ந்தில் இருந்து பல்வேறு வகையான மதுபான போத்தல்கள் 66 கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எகிப்பு பிரஜையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment