போதைப் பொருட்களுடன் 24 வெளிநாட்டவர்கள் கைது

208 0

2017 ஆம் ஆண்டின் முதல் 5 மாதகாலப்பகுதியில் ஹெரோயின் மற்றும் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 24 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 34 கிலோ ஹெரோயின், 52 கிலோ கேரள கஞ்சா மற்றும் கொக்கேய்ன் ஹஸீஸ் முதலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

09 பாகிஸ்தானியர்கள், 08 இந்தியர்கள், 02 நைஜீரியர்கள் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, மாலைதீவுகள், ஈரான், லட்வியா முதலான நாடுகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் என குறித்த 24 வெளிநாட்டவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டில், 83 வெளிநாட்டவர்கள், போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

20 இந்தியர்கள், 19 மாலைதீவினர்கள, 17 பாகிஸ்தானியர்கள் மற்றும் 12 நைஜீரியர்கள் உட்பட மேலும் சில நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து, சுமார் 142 கிலோ ஹெரோயின், 125 கிலோ கேரள கஞ்சா உள்ளிட்ட ஏனைய போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Leave a comment