காலி கடற்கரையின் அழகை ரசித்த விராட் கோஹ்லி!

210 0

இலங்கையின் புகழ்மிக்க காலி கடற்கரை மீது இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி விருப்பம் கொண்டுள்ளார்.

காலி கடற்கரையின் அழகு தொடர்பில் கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

காலி நகரம் தொடர்பில் கோஹ்லி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது.

காலி கடற்கரையில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் “இவ்வாறான சூழலை தினமும் காலையில் பார்க்க கிடைத்தால்…” என குறிப்பிட்டு டுவிட்டரில் கோஹ்லி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கோலியின் இந்த டுவிட்டர் பதிவினால் இலங்கை சுற்றுலாத் துறைக்கு பெரிய அளவில் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இலங்கை வந்துள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.

Leave a comment