அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

245 0

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இராணுவ ஆலோசகராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் ரணவக்கவும் பங்கேற்றார்.

லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் சில நாட்களுக்கு முன்னரே, அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment