ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமான பாராளுமன்ற விவாதம் இன்று

206 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது சம்பந்தமான உத்தேச ஒப்பந்தம் சம்பந்தமான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளது. 

அரச மற்றும் தனியார் இணைந்த வேலைத்திட்டமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் செயற்படுவதே அந்த ஒப்பந்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது என்று கப்பல் மற்றும் துறைமுக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமான உடன்படிக்கை நாளை (29) கைச்சாத்திடப்பட உள்ளதாக கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறினார்.

Leave a comment