வௌிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

227 0

ஒரு கோடி 35 இலட்சத்திற்கும் அதிகமான வௌிநாட்டு நாணயங்களை சட்ட விரோதமாக நாட்டில் இருந்து கடத்திச் செல்வதற்கு முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது ஒருவரே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 08 மணியளவில் மும்பை ஊடாக சிங்கப்பூர் நோக்கிச் செல்ல தயாராக இருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

சந்தேகநபரிடமிருந்து சுவிஸ் பிராங், யூரோ மற்றும் நோர்வே க்ரோன்ஸ் போன்ற நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

03 இலட்சம் ருப தண்டம் அறவிட்ட பின்னர் சந்தேக நபரை விடுவித்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

Leave a comment