ஆசியாவின் நோபல் விருதுக்கு இலங்கை தமிழ்ப்பெண் தெரிவு

210 0

ஆசியாவின் நோபல் பரிசு என்று கூறப்படும் ரெமோன் மெக்செசே விருது இந்த ஆண்டு இலங்கைத் தமிழ் பெண்ணான கெத்ஷி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது

இந்த விருது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படவுள்ளது
ரெமோன் மெக்செசே என்பவர் 1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக பணியாற்றினார்

இந்தநிலையில் அவரின் நினைவாகவே ரெமோன் மெக்செசே விருது வழங்கப்பட்டு வருகிறது.

82 வயதாக கெத்சி சண்முகம், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளனவர்கள், கணவனை இழந்தப் பெண்கள், சிறுவர்களுக்கு மனவள ஆலோசனைகளை வழங்கி வரும் ஒருவராவார்.

ஏற்கனவே இலங்கையின்; பண்டிதர் அமரதேவ் போன்ற பல ஆறு இலங்கையர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment