பெண்களுக்கும் ஐ.பி.எல் போட்டிகள் வேண்டும் – மிதாலி ராஜ் 

442 0

ஐபிஎல் போன்ற தொடர்கள் மகளிர் கிரிக்கெட் போட்டிகளிலும் நடத்தப்படவேண்டும் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

எனினும் கடுமையாக போராடிய இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே மிதாலி ராஜ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டி உள்ளூர் வீராங்கனைகளின் தரத்தை உயர்த்த உதவிகரமாக இருக்கும். இது போன்ற லீக் போட்டிகள் வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்த வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a comment