உலகத்தையே மாற்றக்கூடிய பயணம் – ரணில் 

239 0

புதிய புரட்சியின் மூலம் இலங்கையை மாத்திரமின்றி உலகத்தையே மாற்றக்கூடிய பயணித்தில் தடம்பதிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

மஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாம் சென்ற பாதை சில நேரம் தாமதமானது, சில இடங்களில் தடங்கலானது.

இன்று கிராமங்களில் வருமானம் குறைவடைந்துள்ளது.

கிராம மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

அதன் காரணமாக அவர்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர்.

எமது பொறுப்பானது புரட்சியை பாதுகாப்பதாகும்.

இன்னொரு புரட்சியாளரே புரட்சியை பாதுகாக்கவும் செய்வார்.

ஆட்சி அமைத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளன.

திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

முதலாவது கட்டம் மெதுவாக நகர்கிறது.

எனினும் அந்த பயணம் சீராக செல்கிறது.

அதனை பாதுகாக்க வேண்டும்.

இரண்டாம் கட்டம் உலகத்தை மாற்றக்கூடிய வகையில் அமைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவி;த்துள்ளார்.

Leave a comment