சிறுமி துஸ்பிரயோகம் – முன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு 19 வருட கடூழிய சிறை

348 0

சிறுமி ஒருவரின் பொறுப்பாளராக இருந்து அவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றாவாளியான வடக்கு களுத்துறை நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு 19 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று களுத்துறை மேல்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன முன்னிலையில் இடம்பெற்றது.

அத்துடன் 10 லட்சம் ரூபா நட்டஈட்டை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு  வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தினத்தில் களுத்துறை பகுதியில் 16வயதுக்கும் குறைவான இந்த சிறுமி துஷ்பிரயோகம் செய்தார் என சட்டமா அதிபர் வடக்கு களுத்துறை காவற்துறை நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment