காய்ச்சல் காரணமாக நாளாந்தம் 7 ஆயிரம் நோயாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதி

218 0

காய்ச்சல் காரணமாக நாளாந்தம் 7 ஆயிரம் நோயாளர்கள் அரச மருத்துவமனைகளை நாடுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுமார் 301 பேர் வரை டெங்கு நோய் தொற்று காரணமாக மரணித்துள்ளனர்.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தின் இதுவரையான 2 மாதக் காலப்பகுதி வரை டெங்கு தொற்றால் 48 ஆயிரத்து 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த செயற்திட்;;டத்தில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், முப்படையினர் மற்றும் காவற்துறையினர் இணையவுள்ளனர்.

Leave a comment