ஆணி வைப்பவர்களை தேடி விசாரணை

307 0

open_busவவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாதைகளில் ஆணி வைப்பவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

அண்மைக்காலமாக பாதைகளில் ஆணி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்படுவதன் காரணமாக பேரூந்து சில்லுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மற்றும் அனுராதப்புரம் நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலே இந்த இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக பேரூந்து சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் காவற்துறையினருக்கு முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.