இளைஞர் கடத்தல் – ஐவர் கைது

279 0

arrested__1_85 லட்சம் ரூபா கப்பம் கோரி இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை தங்காலை தொகுதி விசாரணை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பண்டாரகமயில் வைத்து நேற்று முன்தினம் கடத்தப்பட்ட 29 வயதுடைய குறித்த இளைஞன் தங்காலை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து காவற்துறையினரால் மீட்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் 28,38,48 மற்றும் 49 வயதை கொண்டவர்கள் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தங்காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.