நேபாளியர்கள் இலங்கையில் இருக்கலாம் – விசாரணைகள் தொடர்கின்றன.

277 0

1832308344brazilஇலங்கையில் மேலும் தமது நாட்டின் பிரஜைகள் பதுங்கி இருக்கின்றனரா? என்பது தொடர்பில் நேபாள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாளத்தின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களில் இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்து தொழிலாற்றிவந்த 19 நேபாள நாட்டவர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இவ்வாறு சட்டவிரோதமாக தங்கி இருந்த நேபாளத்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் மேலும் பல நேபாளத்தவர்கள் தங்கி இருக்கலாம் என்ற அபிப்பிராயத்தின் அடிப்படையில், விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.