தமிழக மீனவர்கள் கைது

291 0

201510271133022281_Sri-Lankan-Navy-arrests-34-Tamil-Nadu-fishermen_SECVPF.gifதமிழ் நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நயினாத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் அனைவரும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இலங்கையில் தடுத்த வைக்கப்பட்டிருந்த 77 தமிழக மீனவர்கள் கடந்த மாதமே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.