சவுதி இளவரசர் இலங்கை விஜயம்

241 0

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் சவுதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ​நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சவுதி இளவரசரை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

சவுதி இளவரசர் தலைமையிலான தூதுக் குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி நகருக்கு விஜயம் செய்து அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள அதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட அரச உயர்மட்ட சந்திப்புக்களையும் – பேச்சுக்களையும் நடத்தவுள்ளனர்.

இதன்போது, இலங்கையில் முதலீடு செய்வது குறித்து விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது

Leave a comment