இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மகிழ்ச்சி

293 0

பல்வேறு துறைகளிலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்பிரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று பிற்பகல் சந்தித்துள்ளார்.

இதன்போதே அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் தெற்கிலுள்ள அடிப்படைவாதிகள் அரசாங்கத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொள்ளாமல், வேலைத்திட்டங்களை முன்கொண்டு சென்று, மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment