8 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

384 0

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்து 15 கடல் மைல்கள் தொலைவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவிக் கடற்கொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் ஏனைய கடற்றொழில் உபகரணங்களும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டமை தொடர்பில் இந்த மாதத்தில் 5 தடவைகளில் 30 தமிழக கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment