அரசியலமைப்பிற்காக தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை

288 0

அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தற்போது ஒத்துழைப்பு வழங்காதவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய

நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கா

ன உதவிச்செயலாளர் நாயகம் ஜெப்பிரி பெல்ட்மனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a comment