இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், எதிர்வரும் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள், மாதிரி வினாத்தாள் அச்சிடல் மற்றும் விநியோகித்தலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மாதிரி வினாத்தாள் குறித்த சுவரொட்டிகள், பதாதைகள், துண்டு பிரசுரங்களை பகிர்தல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்தல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
தனிநபர் அல்லது நிறுவனமொன்று இந்த உத்தரவுகளை மீறினால் காவற்துறைக்கு அறிவிக்குமாறு பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.