இலங்கை ஜனாதிபதிக்கு பங்களாதேஸில் சிறந்த வரவேற்பு

355 0

பங்களாதேஸிற்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் டாக்கா சர்வதேச வானுர்தி தளத்தை சென்றடைந்தார்.

பங்களாதேஸ் பிரதமர் ஸேக் ஹஸீனாவின் அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றடைந்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதிக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

1972 ஆம் ஆண்டில் ஆரம்பமாகிய இலங்கை, பங்களாதேஸ் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி, இரண்டு நாடுகளுக்கிடையிலுள்ள பொருளாதார, வர்த்தக தொடர்புகளை புதுப்பொலிவுடன் முன்னோக்கிக் கொண்டுசெல்வதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

அத்துடன் இந்த விஜயத்தின் போது பங்களாதேஸ் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அமைச்சர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

இதுதவிர இருநாடுகளுக்குமிடையே விவசாயம், கல்வி,வெளிவிவகார பயிற்சிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு போன்றதுறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

Leave a comment