கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு – செல்வம் எம் பி

873 0

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 135 ஆவது நாளை எட்டியுள்ளது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது சொந்த நிலத்தில் கால் பதிக்கும் எண்ணத்தோடு மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த  தொடர் போராட்டத்தை தீர்வு கிடைக்கும் வரை  தாம் முன்னெடுக்கப்போவதாக மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக போராடிவரும் மக்கள் ஜனாதிபதியை சந்திக்க போவதாக அறிவித்திருந்தனர் இந்நிலையில் இன்றைய தினம் புதுக்குடியிருப்பு வருகைதந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலனாதனிடம் இதுதொடர்பில் வினவியபோது

கேப்பாபுலவு மக்கள் தங்களுடைய பூர்விக நிலங்களை விடுவிக்குமாறு கோரி நூறு நாட்களுக்கு மேலாக போராடிவருகின்றனர் அவர்களுடைய காணிவிடுவிப்பு தொடர்பில் நாம் பலமுறை பேசியிருக்கிறோம் நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பிலான ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவந்து பேசினோம் ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை

நான் கேப்பாபுலவில் போராடுகின்ற முக்கியமான சிலரை அழைத்து சென்று ஜனாதிபதியுடனும் பிரதமரோடும் சந்திப்பொன்றை ஏற்ப்படுத்தி அவர்களுடைய குறைகளை கேட்டறிய வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன் அந்தவகையில் வருகின்ற நாடாளுமன்ற அமர்விலே கேப்பாபுலவில் போராடுகின்ற முக்கியமான சிலரை அழைத்து சென்று காணி விடுவிப்பு மேற்கொள்வதற்கான முயற்ச்சியை மேற்கொள்ளவிருக்கிறேன்

அவர்களுடைய கோரிக்கை நியாயமானது அது நிச்சயமாக நிறைவு பெறவேண்டும் அந்தவகையில் நாங்கள் இந்த முயற்ச்சியை  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் ஜனாதிபதி பிரதமரோடு மக்களை அழைத்து சென்று அவர்களுடைய  சொந்த காணிகளை விடுவிப்பதற்கான முயற்ச்சியை கைகூட வைக்கின்ற ஒரு முயற்ச்சியாக அடுத்த வாரம் இதனை செய்ய இருக்கிறேன் என்றார்

Leave a comment