மலையக தொடரூந்து சேவைகள் பாதிப்பு

258 0

தொடரூந்து தடம்புரள்வு காரணமாக சேதமடைந்த 60 அடி பாலம் மற்றும் தண்டாவளங்களை சீர் செய்வதற்கு இரண்டு வார காலம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து பாதை பராமரிப்பு பொறியிலாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் கொட்டகலை தொடரூந்து நிலையங்களுக்கிடையே உள்ள 60 அடி பாலத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை அஞ்சல் தொடரூந்து ஒன்று தடம்புரண்டது.

இதன்போது, சுமார் ஆயிரம் பயணிகள் குறித்த தொடரூந்தில் பயணித்ததாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தொடரூந்து தடம்புரள்வு காணமாக காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

150 வருடம் பழைமை வாய்ந்த குறித்த 60 அடி பாலத்தை புனரமைப்பதற்கான இரும்புகளை பெற்று கொள்வதில் சிக்கல் நிலவுவதாக தொடருந்து பாதை பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a comment