அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனம் காலவறையறையின்றி மூடல்

249 0

அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தை காலவறையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாக அதிகாரியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் மாணவர்கள், இன்று காலை கல்லூரியின் பிரதான கட்டிடத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட அசௌகரிய நிலைமையை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர், நிறுவனத்தின் பணிப்பாளரை பணயமாக பிடித்து வைத்திருந்தனர்.

கடந்த 10 ஆம் திகதி அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் இரண்டாம் வருட மற்றும் முதலாம் வருட மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 9 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில், தமது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி, மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment