சிரிபாலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

231 0

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்படும் வட மத்திய மாகாண சபையின் தவிசாளர் டீ.எம்.ஆர்.சிரிபாலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 18 ஆம் திகதி விவாதத்திறகு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் குழுவொன்றினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.

8 குற்றச்சாட்டுக்கள் அடங்கலாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதனை விவாத்திற்கு எடுத்து கொள்வதற்காக மாகாண சபை ஒழுங்கு பத்திரத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Leave a comment