மலையகத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை இன்று மஸ்கெலியாவில் ஆரம்பமாகியுள்ளது.
யாத்திரிகர்கள் குழு ஒன்று, மஸ்கெலியாவில் தொடங்கி, நுவரெலியா, வெளிமடை, பண்டாரவளை, வெல்லவாய, புத்தல வனம் ஊடாக 400 பாதயாத்திரையாக கதிர்காமத்துக்கு செல்லவுள்ளது.
இந்த குழு நாளொன்றுக்கு 40 கிலோமீற்றர்கள் வீதம் நடந்து செல்லும்.
யாத்திரிகர்கள் இரவு வேளைகளில் மத ஸ்தளங்களில் தங்கி இருப்பார்கள்.
எதிர்வரும் 22ம் திகதி அவர்கள் கதிர்காமத்தை சென்றடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.