வெலிக்கடை சிறை கலவரம் – விசாரணைகள் ஆரம்பம்

562 0

வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காவற்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 27 கைதிகள் பலியாகினர்.

இது தொடர்பில் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment