ஆசிய நாடுகளுடனான இரு தரப்பு உறவுகள் முக்கியம் –ரணில்

388 0
இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக முன்னகர வேண்டுமானால் ஆசிய நாடுகளுடனான இரு தரப்பு உறவுகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய நாடுகளுடனான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி கொள்வதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம்.
இந்த உறவுகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆசிய நாடுகளுடன் சிறந்த உறவுகளை பேணி வருகின்ற போது நாடு பல தரப்பட்ட துறைகளில் அபிவிருத்தி அடையும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a comment