தமது உறவுகள் எங்கே என அரசு உடனடியாக பதில் கூறவேண்டும் எனவும் பதில் கூறும் வரை தமது போராட்டம் நிறுத்தப்படாது எனவும் தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று128 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமது உறவுகள் எங்கே என அரசு உடனடியாக பதில் கூறவேண்டும் எனவும் பதில் கூறும் வரை தமது போராட்டம் நிறுத்தப்படாது எனவும் உறுதிபட தெரிவிக்கின்றனர்.