ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

230 0

ஹெரோயின் வைத்திருந்த இரு இளைஞர்கள் தொம்பே – குருசகடுவ மற்றும் தெகடன ஆகிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தொம்பே – குருசகடுவ பகுதியில் இளைஞர் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் 28 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, 2 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் தொம்பே – தெகடன – பெலும்மஹர பகுதியில் வைத்து கைதாகியுள்ளார்.

இவர் 21 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை இன்று பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment