அரசியல் யாப்பில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை நியாயமான பௌத்த மகாநாயக்கர்களுக்கு விளக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கான யோசனைகளின் நியாயத்தை மஹாநாயக்கர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவுதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுசெயலாளரும், கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சருமான கிருஷ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
பௌத்த மகாநாயக்கர்களை சந்தித்து அரசியல் யாப்பில் தாங்கள் முன்வைத்துள்ள யோசனைகள் குறித்து விளக்கமளிப்பதற்கான ஒழுங்குகளை கட்சி மேற்கொண்டு வருகிறது.
விரைவில் இந்த சந்திப்பு நடைபெறும்.
இதன்போது தங்களது தரப்பு நியாயத்தை முன்வைக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்த இறுதி முடிவு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.