நாளை மறுநாள் 16 மணிநேர நீர்வெட்டு

224 0

அத்தியாவசிய திருத்த வேலைகளுக்காக களுத்துறை மாவட்டத்தின் பல இடங்களில் நீர்விநியோகம் நிறுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் காலை 8 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை 16 மணித்தியாலங்கள் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வாதுவை, வஸ்கடுவ, பொதுபிட்டிய, மொரொன்குடுவ கட்டுகுருந்த, நாகொடை, பெந்தோட்டை, பாயாகல மற்றும் வடக்கு – தெற்கு களுத்துறை ஆகிய பிரதேசங்களில் இந்த நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும்.

அதேவேளை போம்பவல, மங்கோன, களுவாமோதர, மொரகல்ல, தர்காநகர், அளுத்கமை மற்றும் பிலமினாவத்த ஆகிய பிரதேசங்களிலும் நீர்விநியோகம் தடைப்படும்.

Leave a comment