தாயொருவர் தனது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

214 0

அலவ்வ பிரதேசத்தில் தாயொருவர் தனது 9 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று இரவு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர், அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான பெண் என காவற்துறை தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

இந்த பெண், பிள்ளையுடன் காணாமல் போயுள்ளதாக அவரின் கணவர், காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளதாக காவற்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment