முல்லைத்தீவு கொக்கிலாய் – கொக்குத்துடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜெலிட்நைட் குச்சிகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட வேளையிலேயே அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கைதுசெய்யப்பட்டபோது, அவர்கள் வசமிருந்த 25 ஜெலட்நைட் குச்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் புல்மோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.