கணவரை கோடரியால் தாக்கிய மனைவி

368 0

தம்பகல்ல – மாரிஅராவ பிரதேசத்தில் பெண்ணொருவர், தனது கணவரை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இன்று காலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அலவதுகொட – கெந்தகொல்ல பிரதேசத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மருமகனின் கோடரி தாக்குதலால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a comment