யாழ் வடமராட்சியில் பொலிசார் துப்பாக்கிச் சூடு! இளைஞர் ஒருவர் பலி!

391 0

யாழ் வடமராட்சி வல்லிபுரக் கோவிலுக்கு அண்மையில் பொலிசார் சுட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள் அப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து

தீ வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை கள்ளமண் ஏற்றி வந்தவர்களை மறித்து சுட்டதாக பொலிஸ்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன…

வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.

உயிரிழந்தவர் 24 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காங்கேசன் துறை மூத்த பொலிஸ் அத்தியட்சிகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையான பொலிஸார் மந்திகை ஆதார மருத்துவனைக்குச் செல்கின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment