இன்று இரவு பல பகுதிகளில் மழை…

353 0

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் அறிக்கை  ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் நாளைய தினம் நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment