யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

360 0

நீர்கொழும்பு பிரதான வீதியில் தேவாலயம் ஒன்றின் அருகில் பாதசாரி கடவையில் வைத்து  யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதசாரி கடவையில் வைத்து யாசகர் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒரு யாசகர் மற்றைய யாசகரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ள நிலையில், படுகாயடடைந்த அவர், நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் பத்மநாதன் என்ற நபராகும்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையை செய்த யாசகர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீர்கொழும்பு காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment