புதிய அரசியல் அமைப்பை உருவாக்க மக்கள் ஆணை இல்லை – விமல் வீரவங்ச

337 0

புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பௌத்த மகா சங்கத்தினரும் இதனை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கே மக்கள் வரம் கிடைக்காத ஐக்கிய தேசியக் கட்சியினர், அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு எவ்வாறு கூற முடியும் என விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a comment