அரசியல் அமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களை பிரச்சாரம் -அமைச்சர் கயந்த கருணாதிலக்க

274 0

உருவாக்கப்படாத அரசியல் அமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களை பிரச்சாரம் செய்துவருவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

அரசில் அமைப்பு தொடர்பான உத்தேச அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அதனை உருவாக்கும் பணிகளே தற்போது இடம்பெற்றுவருகின்றது.

அரசியல் அமைப்பு என்பது இலையில் மறைத்து கொண்டுவரப்படுகின்ற விடயம் ஒன்றல்ல.

மிகவும் வெளிப்படையான நியாயமான ஒரு விடயமாகவே அரசியல் அமைப்பு குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான அனைத்து விடயங்களும் மக்களின் விருப்பத்துடனேயே முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அரசியல் அமைப்பு குறித்த செயற்பாடுகளில் குலப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment