இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து, வெளிநாடு இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்த முடிவு – ஜே.வி.பி

284 0

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஜே.வி.பி. நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அடுத்த மாதம் முதல் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பங்களிப்பு பெருமளவில் கிடைக்கும் நிலையில், இலங்கையின் அபிவிருத்திக்காக அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது இந்த திட்டத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment