2020ஆம் ஆண்டு நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி நாமே – பாட்டளி

287 0

champika_ranawaka_02-740x4502020ஆம் ஆண்டு நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி தம்மிடமே இருக்கும் என ஜாதிக ஹெல உறுமைய தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான பாட்டளி ஷம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.
நாடு இன்று கடுமையான கடன் சுமையில் இருக்கின்றது.
முன்னைய அரசாங்கம் பெற்ற கடனை அடைக்கும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக ஜாதிக ஹெல உறுமைய, புதிய திட்டங்களுடன் தயார் நிலையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.