நல்லிணக்கத்திற்கு தடையாக உள்ளவர் வடக்கு முதல்வரே – அரசாங்கம் குற்றச்சாட்டு

314 0

cv01அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தடையாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பியகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வடக்கு முதல்வர் தொடர்ந்தும் தடையாக இருப்பாராக இருந்தால், நல்லிணக்க செயற்பாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் தயார் இல்லை என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.