மின்சார பாவனைக்காக செலுத்தப்படும் கட்டணம் எந்த தருணத்திலும் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் மீள்சுழற்சி சக்திவலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு அனர்த்த நிலைமைகளின் போது மேலதிக செலவினங்களை ஏற்று மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மீள்சுழற்சி சக்தி உருவாக்கம் ஊடாக எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

