அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து தூதரகங்களுக்கு தகவல்

218 0

அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து தூதரகங்களுக்கும் தகவல்கள் அடங்கிய மகஜர்களை கையளிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. 

சங்கத்தின் இணைப்பாளர் நவீன் டி சில்வா நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த தகவல் வௌியிட்டார்.

சயிட்டம் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தேசிய ரீதியாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதவிர தற்போது தீவிரமாக பரவிச் செல்லும் டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்ைகயிலும் அரச மருத்துவ சங்கம் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

Leave a comment