கொழும்புக்கும் வாரணாசிக்கும் இடையிலான நேரடி விமானச் சேவை

225 0

கொழும்புக்கும் வாரணாசிக்கும் இடையிலான நேரடி விமானச் சேவை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வாரணாசிக்கு செல்லும் இந்து பக்தர்களுக்கான விசேட விமான சேவையாக இது அமையவுள்ளது.

வாராந்தம் இரண்டு தடவைகள் இந்த விமான சேவை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி, இந்த விமான சேவைத் தொடர்பில் அறிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இந்த விமான சேவை நடத்தப்படுகிறது.

வாரணாசியில் சுமார் 23 ஆயிரம் இந்து ஆலயங்கள் இருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment