வீடு ஒன்றில் இருந்து குழந்தையின் உடலம் மீட்பு

221 0

தங்காலை நகரில் வீடு ஒன்றில் இருந்து குழந்தையின் உடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு, குறித்த குழந்தையின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குழந்தை பிறந்து ஒருநாள் என  அறியவந்துள்ளதுடன், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை உடலம் இருப்பதனை அறிந்த நபர் ஒருவர் காவற்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment