இன்று 121 ஆவது நாளாக தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

256 0

தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளவலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 121  ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர் 

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தகைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

121 நாளாக நாம் போராடியும் எமது துன்பம் இந்த அரசுக்கு புரியவில்லையா எதற்க்காக இன்னும் எம்மை இந்த வீதியில் துன்பப்பட வைத்து வேடிக்கை பாக்கின்றனர் என மக்கள் கேள்வி எளுப்பியுள்ளனர். 

Leave a comment