கல்வி சார பணியார்களின் பிரச்சினைக்கு 24 மணிநேரத்தில் தீர்வு

380 0

protest-10-415x260பல்கலைகழக கல்விச் சரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் தீர்வுக்காண எதிர்ப்பார்துள்ளதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான்லால் க்ரேரோ தெரிவித்துள்ளார்.
தமது அமைச்சரவை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று பல்கலைக்கழக கல்விச்சார ஊழியர்கள் ஒன்றியத்துடன் கலந்துரையாடல்களை நடதியுள்ளதாக தெரிவித்தார்.
எனவே குறித்த பணியாளர்களின் வேண்டுகோள்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களை சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் மொஹான்லால் க்ரேரோ குறிப்பிட்டார்.
மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைகழக கல்விச்சார ஊழியர்கள் இன்றுடன் 11 வது நாளாகவும் சேவைப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.